Scrollbar By, CarrielynnesWorld.com CarrielynnesWorld.com Cursor from www.CarrielynnesWorld.com வானவில்லின் வண்ணங்கள்: 09/01/2005 - 10/01/2005

வானவில்லின் வண்ணங்கள்

கவிதைகள்,கதைகள் (என் உயிர் தமிழுக்கு என் உடல் இம் மண்ணுக்கு. என்றென்றும் இம் மண்ணுக்காகவும், நட்புக்காகவும் வாழும் ஜீவன் நான்.)

Sunday, September 11, 2005

ஏங்குகின்றேன்!

உன்னை எப்பொழுது
கண்டேனோ
அன்று முதல் நான்
என்னிடம் இல்லை
உன்னால் பசி,
உறக்கம் ஏன் நிதானத்தை
கூட இழந்தேன்!

எனக்குள் நானே
சிரித்துக் கொள்கின்றேன்!
எனக்குள்ளே ஏதேதோ
பேசுகின்றேன்
இதெல்லாம் உன்னாலடா!

நான் எதற்கும்
ஏங்கியதில்லை
உன்னனக் கண்ட பின்
நீ எனக்கு கிடைக்க
வேண்டும் என
ஏங்குகின்றேனடா!

உண்மையில்
காதல் என்பது
ஒரு நோய்
அது எப்போ வரும்,
போகும் என
புரியாது
என்னுள்வந்துவிட்டது
அந்தநோய்!

என்னை
குணமாக்குவாயா?
நீ எனக்கு
கிடைப்பாயா?
சொல்லடா சொல்!!!
 
Free Web Counter
Free Hit Counter