Scrollbar By, CarrielynnesWorld.com CarrielynnesWorld.com Cursor from www.CarrielynnesWorld.com வானவில்லின் வண்ணங்கள்: 05/01/2005 - 06/01/2005

வானவில்லின் வண்ணங்கள்

கவிதைகள்,கதைகள் (என் உயிர் தமிழுக்கு என் உடல் இம் மண்ணுக்கு. என்றென்றும் இம் மண்ணுக்காகவும், நட்புக்காகவும் வாழும் ஜீவன் நான்.)

Tuesday, May 31, 2005

நீ தான் என் வாழ்க்கை

நீ தான் என் வாழ்க்கை

உயிரே உனை நான்
விரும்புவது
புரியவில்லையா?

உன்னைக் கானும்
போதெல்லாம்
என் மனம்தொலைந்து
போகிறது!

உன்னைக் காணாத
போது என் விழிகள்
அழுகின்றது!

காதல் என்றால்
தெரியாமல் இருந்தேன்!
எனக்கு அதையும்
காற்பித்தவள் நீதான்!

உன்னை அறியாமலே
எனக்கு காதலை
ஊட்டிவிட்டாய்!

காதல் உறவு
மட்டுமன்றி பெரியோரின்
சம்மதத்தோடு
நம் திருமணம் நடக்க
வேண்டும் என்பதுதான்
என் ஆசை!

இவ்வாழ்வில் நீ
எனக்கானால்
இவ்வுலகம் என்
பக்கமே!

Sunday, May 29, 2005

எனதாசைகள்.

எனதாசைகள்.

உன்னோடு வாழவேண்டும்
உன்னோடு கைகோத்து திரிய
வேண்டும்!

உன்னோடு சண்டை
பிடிக்க வேண்டும்!

இப்படி எத்தனையோ
ஆசைகள்!
ஆனால் எனது
ஆசைகளை நிராசையாக்கி
முடியாது
என்று விட்டாய்!

நீ எனதாசையை
நிறைவேற்றினால் நான்
வாழ்வேன் இல்லையேல்
மண்ணோடு
போயினான் சேருவேன்!

Saturday, May 28, 2005

நீ வருவாய் என

நீ வருவாய் என

தினம் தினம் வழி
எதிர்பார்க்கின்றேன் நீ
வருவாய் என!

தினம் தினம் கடிதம்
அனுப்புகின்றேன் நீ
பதில் கூறுவாய் என!

தினம் தினம் பறவைகளிடம்
கூறுகின்றேன் உனக்கு
போய் கூறாதா என்ற
நற்பாசையில்!

தினம் தினம் உனக்காக
காத்திருக்கின்றேன்
உனது குரல் கேக்காதா என!

தினம் தினம் டெலிபோன்மணி
அடித்தால் உனது
அழைப்பென ஒடி போய்
பார்த்து ஏமாறுகின்றேன்!

கோவில் திருவிழா
வருகின்தென்றால்
நீ நிச்சயம் வருவாய் என!

எதிபார்த்து ஏமாறுகின்றேன்
எல்லா விதத்திலும் ஏமாற்றம்தான்
மிச்சம் இருந்தாலும் இவள்
காலம்பூராக உனக்காக
எதிர்பார்த்து காத்திருப்பாள்
உன் வஞ்சியவள்.

Thursday, May 26, 2005

இனியவளே!

இனியவளே!

என் உயிரிலே
கலந்தவளே!
எனக்கெனவே
பிறந்தவளே!

என்னை மிக மிக
நேசித்தவளே!
எனக்காக உன்
உயிரையும்
கொடுக்க முன்
வந்தவளே!

எனது உயிருக்காக
உனது காதலை
தியாகம் செய்து
பிரிந்து சென்றவளே!

உனது பிரிவு தாங்காது
துடிக்கின்றேன்
நான்

இவ்வுலகை
விட்டு நீ எப்பொழுது
செல்கின்றாயோ
அப்பொழுதே அன்ரில்
பறவை போல் என்
உயிரும் செல்லும்
இது தான்

நமது காதல்!




Tuesday, May 24, 2005

ஆனந்தமழை!

ஆனந்தமழை


உனை பார்த்த நிமிஷத்தில்
எனை மறந்தேன் நான்.
எந்தன் கண்ணில்இருக்கும்
உன்னிடம் என் இதயத்தை
பறிகொடுத்தேன் நான்!

அந்நிமிடமே நான் ஒரு
பறவையானேன்!
பறவையான நான்
எனது நினைவுகளிலே
சிறகடித்துப் பறக்கின்றேன்.

ஏனோ மனது உன்னைக்
கண்ட பொழுது காற்றிலிலே
கரைந்துபோகிறதே!

ஆனந்த மழையை
கண்டதில்லை நான்
ஆனால் உன்னை
கண்ட முதல் தினம்
தினம் நனைகின்றேன்
ஆனந்தமழையில்!
 
Free Web Counter
Free Hit Counter